சிரியாவின் வடமேற்கு பகுதியில் டார்குஷ் நகரின் அருகே பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது
சிரியாவில் ஆதரவற்றோருக்கான பள்ளியிலிருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து சென்றது. சிரியாவின் வடமேற்கு பகுதியில் டார்குஷ் நகரின் அருகே ஓரண்டஸ் ஆற்றை ஒட்டியுள்ள மலைப்பாதையில் சென்ற பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் சாலையைவிட்டு இறங்கிய பேருந்து, பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர், மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில். குழந்தைகள் உள்ளிட்ட 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்..விபத்துக்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.